படுகின்றனர்.'இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தேர்தல் பணியில், ஒவ்வொரு சிறப்பு ஆசிரியரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்; அதற்காக, அவர்களின் பெயர் பட்டியலை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. அவர்கள் தினக்கூலியை விட, குறைவான சம்பளம் வாங்குகின்றனர். பள்ளி விடுமுறை என்றால் ஊதியம் கிடையாது. அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் வழங்காமல், திடீரென தேர்தல் பணிக்கு மட்டும் வர கட்டாயப்படுத்துவது, அதிர்ச்சியாக உள்ளது, என்றார்.








