பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், கட்டணமில்லா கல்வித் திட்டத்தில்
கல்லுாரிகளில் சேர, ஜூன், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, சென்னை
பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காக, கல்லுாரிகளில்,
கட்டணமில்லாத கல்வித் திட்டத்தில், பட்டப் படிப்புகளை, 2010 - 11 கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை பார்க்கும் பெற்றோரின் பிள்ளைகள், முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள், கணவனை இழந்த கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை தரப்படும். மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.unom.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காக, கல்லுாரிகளில்,
கட்டணமில்லாத கல்வித் திட்டத்தில், பட்டப் படிப்புகளை, 2010 - 11 கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை பார்க்கும் பெற்றோரின் பிள்ளைகள், முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள், கணவனை இழந்த கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை தரப்படும். மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.unom.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...