பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண்
அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.இதில், தனியார்
பள்ளிகள் முன்கூட்டியே நுழைவுத் தேர்வு நடத்தி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு
வந்ததும், மதிப்பெண் அடிப்படையில், வேகமாக பிளஸ் 1 சேர்க்கையை முடித்து
விட்டன.
ஜூன், 6ம் தேதி
முதலே தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி விட்டன.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக,
நாளை முதல் வகுப்புகள் துவங்குகின்றன.