சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர்ரகுமான்
பல்கலைக்கழகத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலை வாய்ப்புகள் பெறும் வகையில்
காப்பீட்டுக் கணித அறிவியல் என்ற புதிய பட்டப்படிப்பைத் தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கணிதவியல், புள்ளிவிவரவியல்,பொறியியல், வணிகவியல்,பொருளாதாரம்
பயின்ற பி.எஸ்.சி, பி.காம், பி.ஏ. பட்டதாரிகள் இந்தப் படிப்பில் சேரலாம்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு
காப்பீட்டு நிறுவனங்கள்,நிதி முதலீடு ஆலோசனை மற்றும் மேலாண்மை
நிறுவனங்கள்,பணி ஓய்வு,வங்கிகள், மருத்துவமனைகள் ஆகிய துறைகளில் உடனடியாக
வேலைவாய்ப்புகளைப் பெறவும், அதிக சம்பளம் பெறவும் மிகுந்த வாய்ப்புள்ளது.
காப்பீட்டு கணித அறிவியல் பட்டதாரிகள் சொந்தமாகவும் தொழில் தொடங்க முடியும்.
இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச
அளவிலான தொழில் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும்
நிறுவனத்தையும் தொடங்கி பயன் பெறலாம்.
நான்கு செமஸ்டர் படிப்புகளைக் கொண்ட காப்பீட்டு கணித அறிவியல்
படிப்பை நிறைவு செய்யும்போது முழுமையான தொழில் பயிற்சி பெற்று, வேலை
பெறும் தகுதியானவர்களாக திகழ முடியும்.
மும்பையில் உள்ள காப்பீட்டு கணித அறிவியல் கழகம் பிளஸ்-2
தேர்வில் கணித பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும்
நுழைவுத் தேர்வு நடத்தி வருகின்றது.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இந்தியாவெங்கும் சில
கல்லூரிகள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுவரும் இளநிலை காப்பீட்டு கணித
அறிவியல் பட்டப்படிப்பிலும், பின்னர் முதுநிலை காப்பீட்டு கணித அறிவியல்
பட்டப்படிப்பிலும் சேர முடியும்.
தமிழ்நாட்டில் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில்
தொடங்கப்பட்டுள்ள காப்பீட்டு கணித அறிவியல் படிப்பில் சேர
விரும்புகிறவர்கள் தொலைபேசி எண் 044-22759200, செல்லிடப்பேசி எண்
9444182227 மூலம் தொடர்பு கொள்ளலாம்.