அந்த நிறுவனம், மொத்தம் மூன்று கல்லூரிகளை சேர்ந்த 450 பேரை தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்தது. பின்னர் வேலையில் சேர பணி உத்தரவும் வழங்கியது.
அந்த நிறுவனம், சம்பளம் செலுத்த வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனகூறி ஒவ்வருவரிடம் இருந்தும் ரூ.1000 பெற்றுக் கொண்டது. இந்நிலையில், வேலையில் சேரும் நாளில் தான் அது போலி நிறுவனம் என எங்களுக்கு தெரியவந்தது.
இது மாதிரியான போலி நிறுவனங்களை, கல்லூரி எவ்வாறு கேம்பஸ் இன்டர்வியூ நடத்த அனுமதித்தது என தெரியவில்லை.
இந்த நிறுவனம் இதே போல பலரிடம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் மேலாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








