குழந்தைகளைத் தாக்கும் மனச்சோர்வு
மனச்சோர்வு என்பது பெரியவர்களை மட்டும் அல்ல, சிறார்களையும், இளம் வயதினரையும் கூட தாக்குகிறது. ஆனால், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் தெரிந்தும், பெற்றோரும், ஆசிரியர்களும், அவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று தவறாக கருதி விடுகின்றனர்.
ஆனால், உண்மை அவ்வாறு இருப்பதில்லை. பல்வேறு காரணிகளால் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் கூட மனச்சோர்வு ஏற்படுகிறது.
மனச்சோர்வுற்ற சிறாருக்கும், பதின்மவயதினருக்கும் பரிவு நிச்சயமாகத் தேவை. ஆனால் அது மட்டுமே போதாது. மேலும், வீட்டில் உள்ள பிரச்னைகள் சில நேரங்களில் மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான இளைஞர்களுக்கு வெளிவட்டார பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் காரணமாகவும் மனச்சோர்வு ஏற்படுகிறது. எனவே, நமது வீட்டில் இருந்து கிளம்பும் குழந்தைகள் சந்திக்கும் நபர்கள், அவர்களது அனுபவங்களை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்.
சிறுவருக்கோ, இளைஞருக்கோ மனச்சோர்வு இருப்பது தெரிய வந்தால், அதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதனை மாற்ற முயற்சிகள் எடுத்தால் மனச்சோர்வில் இருந்து விடுபட நாம் உதவுவதற்கு வழி ஏற்படும். மனச்சோர்வு என்றதும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
அன்பாகப் பேசி, அவர்களது குறையை எடுத்துக் கூறாமல், அவர்களது நிறைகளை எடுத்துச் சொல்லி, அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளையும், அதனால் அவர்களை மிகவும் பிடிக்கும் என்பது போன்ற வார்த்தைகளையும் இதமாகப் பேச வேண்டும்.
மனச்சோர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களுக்கு நாம் பெரிய பிரச்னையாகிவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆதாரம் : தினமணி மனநலம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...