எம்.இ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான, 'டான்செட்'
நுழைவுத்தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள
இன்ஜி., கல்லூரிகள், சென்னை பல்கலை உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., -
எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., படிப்பில் சேர, 'டான்செட்'
என்றதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வில், எம்.பி.ஏ.,வுக்கு, 13 ஆயிரத்து, 729
பேரும்; எம்.சி.ஏ.,வுக்கு, 5,469 பேரும்;எம்.இ.,க்கு, 14 ஆயிரத்து, 12
பேரும் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று, அண்ணா பல்கலை
இணையதளத்தில் வெளியிடப்பட்டன.







