இதில், அந்தந்த பகுதி பிரச்னைகளுக்கு பள்ளி மாணவர்கள்மூலம் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். அதில், அவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இத்திட்டத்திற்கு மதுரை அருகே உள்ள பள்ளி மாணவர்களின் சாதனை, முன்மாதிரியாக காட்டப்பட்டுள்ளது. அப்பள்ளிக்கு மாணவர்கள் 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். மரங்கள் இன்றி வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. இதை உணர்ந்த தலைமை ஆசிரியர், மாணவர்கள் மூலம் ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டார். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 2 தண்ணீர் பாட்டில் வழங்கினார். தினமும் வீட்டில் இருந்து வரும்போதும், பள்ளியில் இருந்து திரும்பும் போதும் பாட்டில்களில் நீர் நிரப்பி மரக்கன்றுகளுக்கு ஊற்ற வலியுறுத்தினார்.அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த ரோட்டில் மரம் நன்கு வளர்ந்து நிழல் தரும் சோலையாக மாறியது. இதுபோன்று அந்தந்த பகுதியில் நிலவும் பிரச்னைகளைமாணவர்கள் மூலம் தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது.
இதில், அந்தந்த பகுதி பிரச்னைகளுக்கு பள்ளி மாணவர்கள்மூலம் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். அதில், அவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இத்திட்டத்திற்கு மதுரை அருகே உள்ள பள்ளி மாணவர்களின் சாதனை, முன்மாதிரியாக காட்டப்பட்டுள்ளது. அப்பள்ளிக்கு மாணவர்கள் 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். மரங்கள் இன்றி வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. இதை உணர்ந்த தலைமை ஆசிரியர், மாணவர்கள் மூலம் ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டார். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 2 தண்ணீர் பாட்டில் வழங்கினார். தினமும் வீட்டில் இருந்து வரும்போதும், பள்ளியில் இருந்து திரும்பும் போதும் பாட்டில்களில் நீர் நிரப்பி மரக்கன்றுகளுக்கு ஊற்ற வலியுறுத்தினார்.அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த ரோட்டில் மரம் நன்கு வளர்ந்து நிழல் தரும் சோலையாக மாறியது. இதுபோன்று அந்தந்த பகுதியில் நிலவும் பிரச்னைகளைமாணவர்கள் மூலம் தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது.








