தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து
தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான
பணியாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு, நடத்தப்படும் குரூப் 4
தேர்வுகள்குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது.அதன்படி,
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345*
*இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121*
*வரி தண்டலர் - 8*
*நில அளவர் - 532*
*வரைவாளர் - 327*
*தட்டச்சர் - 1714*
*சுருக்கெழுத்து தட்டச்சர் - 404ஆகிய பணியிடங்களுக்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி
வருகிறசெப்டம்பர் மாதம் 8-ம் தேதியாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி
தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதியாகும். தேர்வு நாள் வருகிற
நவம்பர் மாதம் 6-ம் தேதியாகும்.விருப்பமுள்ளவர்கள்
www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.