பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தன், தொலைபேசி
வாடிக்கையாளர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், நாடு முழுவதும், இலவசமாக
பேசும் சலுகையை
அறிமுகம் செய்துள்ளது. பெருகிவிட்ட போட்டி
காரணமாக, தன்னுடைய தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்
கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம்
பல சலுகைகளை அளித்து வருகிறது.
தற்போது, இரவு, 9:00 மணி முதல்
காலை, 7:00 மணி வரை, இந்தியாவில் உள்ள வேறு எந்த நிறுவனத்தின்
வாடிக்கையாளர்களுக்கும், பேசும் அழைப்புகளுக்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம்
கட்டணம் வசூலிப்பதில்லை. இந்நிலையில் தற்போது, மேலும் ஒரு சலுகையை, வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது.
இது
குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தினர் கூறியதாவது: சுதந்திர தினத்தை
முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள எங்கள் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு,
புதிய சலுகை அறிவித்துள்ளோம். இனி, ஞாயிற்றுக்கிழமைகளில், எந்த
நிறுவனத்தின் தரைவழி மற்றும் மொபைல் போன் வாடிக்கையாளர்களுடனும்,
பி.எஸ்.என்.எல்., தொலைபேசி மூலம் இலவசமாக பேசலாம். இதன்படி, சென்னை தொலைத்
தொடர்பு வட்டத்தில் மட்டும், ஏழு லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.