நாட்டின்,
70வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லியில் நேற்று, 93 நிமிடம், பிரதமர்
நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் சுதந்திர தினத்தில், செங்கோட்டையில் உரையாற்றும் நான், குறிப்பாக சிலருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்; பலுாசிஸ்தான், கில்கித், பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், இதயப்பூர்வமாக எனக்கு, சமீபத்தில் நன்றி தெரிவித்தனர்; அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தியா, பாக்., நாடுகளில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை கருத்தில் வைத்து, இந்த நாடுகளின் நடத்தையை, சர்வதேச சமுதாயம் எடை போட வேண்டும். இரு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர பள்ளியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்; அப்போது, இந்திய பார்லிமென்டில் உறுப்பினர்கள் கண்ணீர் வடித்தனர். மனித நேயத்துக்கு உதாரணம் இதுவே; மாறாக, பாகிஸ்தானில் பயங்கரவாதம் பெருமைப்படுத்தப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், தியாகிகளின் ஓய்வூதியம், 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின், ஒரு லட்ச ரூபாய் வரையிலான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்.
சமூக நீதி அடிப்படையில் வலிமையான சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்; இப்படிப்பட்ட சமுதாயம் உருவாகாமல், வலிமையான நாடு உருவாகாது. காலம் காலமாய் வழக்கத்தில் உள்ள சமூக கொடுமைகளான ஜாதி, தீண்டாமை போன்றவற்றை ஒழிக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டு முன்னேற்றத்துக்கு, சமூக நல்லிணக்கம் அவசியம்.ஒரு சமுதாயம், தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர்; மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள் என பிரிந்து கிடந்தால், அது போன்ற சமுதாயம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது; எனவே, 'சீர்திருத்தம், நிறைவேற்றம், உருமாற்றம்' என்ற வழிமுறையை பின்பற்ற முயற்சிக்கிறேன்.
இதற்கு முன், மத்தியில் இருந்த அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டிருந்தது. தற்போதைய அரசு, எண்ணற்ற எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், சிறந்த நிர்வாகத்தை நோக்கி புத்துணர்ச்சியுடன் வீறுநடை போடுகிறோம்.
நாட்டில் தொழில் செய்வதை எளிமையாக்கல், ஊழலை ஒழித்தல், சிறந்த நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு அளித்தல், விவசாயிகளுக்கு பல்வேறு பயன்களை அளித்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
நாட்டின் சுதந்திர தினத்தில், செங்கோட்டையில் உரையாற்றும் நான், குறிப்பாக சிலருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்; பலுாசிஸ்தான், கில்கித், பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், இதயப்பூர்வமாக எனக்கு, சமீபத்தில் நன்றி தெரிவித்தனர்; அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தியா, பாக்., நாடுகளில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை கருத்தில் வைத்து, இந்த நாடுகளின் நடத்தையை, சர்வதேச சமுதாயம் எடை போட வேண்டும். இரு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர பள்ளியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்; அப்போது, இந்திய பார்லிமென்டில் உறுப்பினர்கள் கண்ணீர் வடித்தனர். மனித நேயத்துக்கு உதாரணம் இதுவே; மாறாக, பாகிஸ்தானில் பயங்கரவாதம் பெருமைப்படுத்தப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், தியாகிகளின் ஓய்வூதியம், 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின், ஒரு லட்ச ரூபாய் வரையிலான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்.
சமூக நீதி அடிப்படையில் வலிமையான சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்; இப்படிப்பட்ட சமுதாயம் உருவாகாமல், வலிமையான நாடு உருவாகாது. காலம் காலமாய் வழக்கத்தில் உள்ள சமூக கொடுமைகளான ஜாதி, தீண்டாமை போன்றவற்றை ஒழிக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டு முன்னேற்றத்துக்கு, சமூக நல்லிணக்கம் அவசியம்.ஒரு சமுதாயம், தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர்; மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள் என பிரிந்து கிடந்தால், அது போன்ற சமுதாயம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது; எனவே, 'சீர்திருத்தம், நிறைவேற்றம், உருமாற்றம்' என்ற வழிமுறையை பின்பற்ற முயற்சிக்கிறேன்.
இதற்கு முன், மத்தியில் இருந்த அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டிருந்தது. தற்போதைய அரசு, எண்ணற்ற எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், சிறந்த நிர்வாகத்தை நோக்கி புத்துணர்ச்சியுடன் வீறுநடை போடுகிறோம்.
நாட்டில் தொழில் செய்வதை எளிமையாக்கல், ஊழலை ஒழித்தல், சிறந்த நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு அளித்தல், விவசாயிகளுக்கு பல்வேறு பயன்களை அளித்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
மோடி உரையின் சிறப்பம்சங்கள்
* ஆண்டுதோறும் ரூ.1 லட்சம்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், ஆண்டுதோறும் தலா ஒரு லட்ச ரூபாய் வரையிலான, அவர்களின் மருத்துவச் செலவுகளை மத்திய அரசு ஏற்கும்.
* கூட்டு பொறுப்பு
சமூக நீதி, கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை, நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும். வலிமையான சமுதாயமே, வலிமையான இந்தியாவை உறுதி செய்யும்; சமூக நீதியே, வலிமையான சமூகத்தைஉருவாக்கும்.
* பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம், 6 சதவீதத்துக்கு மேல் போகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முந்தைய அரசில், பணவீக்கம், இரட்டை இலக்கத்தை தாண்டி இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய இலக்காக, 4 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும்.
* பாக்.,கிற்கு கண்டனம்
பயங்கரவாதிகளை கவுரவப்படுத்தி பார்க்கும், ஒரு நாடு என்ன நாடாக இருக்க முடியும்? அப்பாவிகள் கொல்லப்படும் சம்பவங்கள், அண்டை நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள நாட்டில், என்ன மாதிரியான அரசு இருக்க முடியும்? அந்த நாட்டின் இரட்டை வேடத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் இந்தியா அடிபணியாது.
* எல்.இ.டி., பல்புகளால் சேமிப்பு
எல்.இ.டி., பல்புகளின் விலை, மத்திய அரசின் தலையீட்டால், 350 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும், எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்துவதால், 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை, எரிசக்தி பயன்பாட்டில் மிச்சப்படுத்த முடியும். இந்த வகை பல்புகள், மின்சாரத்தை மட்டுமல்லாது கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைக்கின்றன; இதனால் இவை, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளன.
* இலவச 'காஸ்' இணைப்பு
கடந்த, 100 நாட்களில் நாடு முழுவதும், 50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல், 'காஸ்' இணைப்புகள் தரப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல், 'காஸ்' இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஜி.எஸ்.டி.,யால் வளர்ச்சி
நாடு முழுவதும், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகளுக்கு மாற்றாக அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் கணிக்க முடியும். நாடு முழுவதும் ஒரே சந்தையாக மாறும் வாய்ப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ளது.
* வரி பயங்கரவாதத்திற்கு முடிவு
நடுத்தர வர்க்கத்தினரை, போலீசாரைவிட வரித்துறை அதிகாரிகளே அதிகம் துன்புறுத்துகின்றனர். இந்த வரி பயங்கரவாத நிலையை மாற்ற வேண்டும்.
* ஆண்டுதோறும் ரூ.1 லட்சம்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், ஆண்டுதோறும் தலா ஒரு லட்ச ரூபாய் வரையிலான, அவர்களின் மருத்துவச் செலவுகளை மத்திய அரசு ஏற்கும்.
* கூட்டு பொறுப்பு
சமூக நீதி, கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை, நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும். வலிமையான சமுதாயமே, வலிமையான இந்தியாவை உறுதி செய்யும்; சமூக நீதியே, வலிமையான சமூகத்தைஉருவாக்கும்.
* பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம், 6 சதவீதத்துக்கு மேல் போகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முந்தைய அரசில், பணவீக்கம், இரட்டை இலக்கத்தை தாண்டி இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய இலக்காக, 4 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும்.
* பாக்.,கிற்கு கண்டனம்
பயங்கரவாதிகளை கவுரவப்படுத்தி பார்க்கும், ஒரு நாடு என்ன நாடாக இருக்க முடியும்? அப்பாவிகள் கொல்லப்படும் சம்பவங்கள், அண்டை நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள நாட்டில், என்ன மாதிரியான அரசு இருக்க முடியும்? அந்த நாட்டின் இரட்டை வேடத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் இந்தியா அடிபணியாது.
* எல்.இ.டி., பல்புகளால் சேமிப்பு
எல்.இ.டி., பல்புகளின் விலை, மத்திய அரசின் தலையீட்டால், 350 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும், எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்துவதால், 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை, எரிசக்தி பயன்பாட்டில் மிச்சப்படுத்த முடியும். இந்த வகை பல்புகள், மின்சாரத்தை மட்டுமல்லாது கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைக்கின்றன; இதனால் இவை, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளன.
* இலவச 'காஸ்' இணைப்பு
கடந்த, 100 நாட்களில் நாடு முழுவதும், 50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல், 'காஸ்' இணைப்புகள் தரப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல், 'காஸ்' இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஜி.எஸ்.டி.,யால் வளர்ச்சி
நாடு முழுவதும், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகளுக்கு மாற்றாக அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் கணிக்க முடியும். நாடு முழுவதும் ஒரே சந்தையாக மாறும் வாய்ப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ளது.
* வரி பயங்கரவாதத்திற்கு முடிவு
நடுத்தர வர்க்கத்தினரை, போலீசாரைவிட வரித்துறை அதிகாரிகளே அதிகம் துன்புறுத்துகின்றனர். இந்த வரி பயங்கரவாத நிலையை மாற்ற வேண்டும்.
Advertisement
இதற்கு முடிவு கட்டும் வகையில், மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திறந்தவெளி மேடையில்...
நாட்டின், 70வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லி, செங்கோட்டையில் நேற்று, குண்டு துளைக்காத மேடையை பயன்படுத்தாமல், திறந்தவெளி மேடையில் நின்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கடந்த, 1984ல், காங்., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பின், குண்டு துளைக்காத மேடையின் பின்னால் நின்றபடி, பிரதமர் சுதந்திர தின உரையாற்றுவதே வழக்கமாக மாறி இருந்தது; அதை மாற்றும் வகையில், 2014 முதல், திறந்தவெளி மேடையில் மோடி பேசி வருகிறார்.
பலத்த பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி, டில்லி, செங்கோட்டையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதங்களுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முகலாயர் கோட்டை, ராஜபாதை உள்ளிட்ட பகுதிகளில், பல அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. செங்கோட்டையில், உள்ளடுக்கு பாதுகாப்பு பணிகளை, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்டனர்.
ஆளில்லா விமானம் போன்றவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன், அதிரடிப்படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
விழா துளிகள்...
* நாட்டின், 70வது சுதந்திர தினத்தில் பங்கேற்பதற்காக, காலை, 7:23 மணிக்கு, சிறப்பு வாகனத்தில் பிரதமர் மோடி, செங்கோட்டைக்கு வந்தார்
* முப்படைகளின் வீரர்கள், டில்லி போலீஸ் அளித்த அணிவகுப்பு மரியாதையை, மோடி பார்வையிட்டார்
* காலை, 7:30க்கு, பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வணக்கம் செலுத்தினார்; அப்போது, 21 குண்டுகள் முழங்க, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது
* அதன் பின், 93 நிமிடம், பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார்
* வி.ஐ.பி.,க்கள், மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள், 2,000 பேர், பள்ளிக் குழந்தைகள், 9,000 பேர், பொதுமக்கள், 10 ஆயிரம் பேர் உட்பட, 22 ஆயிரம் பேர் அமரும் வகையில், இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன
* முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் மனைவி குர்சரண் கவுர், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், வி.வி.ஐ.பி.,க்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்
* பிரதமர் மோடி உரையாற்றிய போது, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரீக்கர் ஆகியோர், குட்டித் துாக்கம் போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
* முப்படைகளின் வீரர்கள், டில்லி போலீஸ் அளித்த அணிவகுப்பு மரியாதையை, மோடி பார்வையிட்டார்
* காலை, 7:30க்கு, பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வணக்கம் செலுத்தினார்; அப்போது, 21 குண்டுகள் முழங்க, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது
* அதன் பின், 93 நிமிடம், பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார்
* வி.ஐ.பி.,க்கள், மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள், 2,000 பேர், பள்ளிக் குழந்தைகள், 9,000 பேர், பொதுமக்கள், 10 ஆயிரம் பேர் உட்பட, 22 ஆயிரம் பேர் அமரும் வகையில், இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன
* முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் மனைவி குர்சரண் கவுர், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், வி.வி.ஐ.பி.,க்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்
* பிரதமர் மோடி உரையாற்றிய போது, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரீக்கர் ஆகியோர், குட்டித் துாக்கம் போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.