1886 - ஆகஸ்ட் 16-கடந்த, 1836 பிப்., 18ம் தேதி,
மேற்குவங்க மாநிலம் காமார் புகூர் கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சர். கோல்கட்டாவில், தட்சிணேஸ்வரம் பவதாரிணி காளி கோவிலில்
அர்ச்சகர் வேலை கிடைத்தது. காளியை நேரில் காண வேண்டும் என்ற ஏக்கத்தில்,
கடும் தியானம் மேற்கொண்டார். இறுதியில், காளி கையில் இருந்த வாளை உருவி,
உயிரை மாய்த்துக் கொள்ளவும் முயன்றார். அப்போது, ஒரு பேரானந்த ஒளி, தன்னை
ஆட்கொண்டதாக கருதினார். அதன்பின், பித்து பிடித்தவர் போலானார்.
பயந்துபோன
குடும்பத்தார், அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்;
ராமகிருஷ்ணரே, தன் மனைவி எங்கு இருக்கிறாள் என்பதை குறிப்பிட்டு, அவளையே
மணம் முடித்தார்; அவர் தான், அன்னை சாரதா தேவி!
தாந்த்ரீகமும், அத்வைத
வேதாந்தமும் கற்றார். சமாதி நிலையில், ஆறு மாதங்கள் இருந்தார்.சுவாமி
விவேகானந்தரின் குருவும், ஆன்மிகப் பேரொளியுமான ஸ்ரீராமகிருஷ்ணர் இறைவனடி
சேர்ந்த தினம் இன்று!