very good article read it : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


very good article read it :

நமது கண்களால் இறந்தகாலத்தை மட்டும் தான் பார்க்கின்றோம்:
நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்படி நிகழ்காலத்தில் வாழும் நாம் நமது கண்களாலும் நிகழ்காலத்தைத் தானா பார்க்கின்றோம்? என்ன வழக்கம் போல் உங்கள் எல்லோரையும் குழப்ப ஆரம்பித்துவிட்டேனா? இல்லை நண்பர்களே, நான் கேட்கும் கேள்விக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. நிகழ்காலத்தில் வாழும் நாம் நமது கண்களாலும் நிகழ்காலத்தைத் தானா பார்க்கின்றோம்? இதை என்னிடம் கேட்டால், நான் இல்லை என்று தான் கூறுவேன். நிகழ்காலத்தில் வாழும் நாங்கள் நமது கண்களால் எப்போதுமே இறந்தகாலத்தை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்! அட, அது எப்படி முடியும் என்று நீங்கள் கேட்டால், தொடர்ந்து படியுங்கள்…
நமது கண்களால் ஒரு பொருளைப் பார்ப்பது என்றால் என்ன? உதாரணத்திற்குச் சூரியனில் இருந்து அனுப்பப்பட்ட ஒளி, பூமியில் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எதாவது ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடையும்போது, அந்தப் பொருள் நமக்குத் தெரிகின்றது என்கிறோம். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும்.

ஒளி ஒரு நொடியில் ஏறத்தாழ 300,000 km தூரம் செல்கிறது. ஆகவே, இந்த ஒளி ஒரே ஒரு நொடியில் மட்டுமே பூமியிலிருந்து சந்திரனுக்குச் சென்றுவிடும். அதேபோல் ஒளி ஒரே ஒரு நொடியில் நமது புவியை 7 தடவைகளுக்கு மேல் சுற்றிவிடும். ஏன், தற்போது புவியில் காணப்படும் அதிவேக ஏவூர்தி (Rocket) கூட ஒரு நொடியில் 15 km மட்டும் தான் செல்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் (Theory of Relativity) அடிப்படையில் ஒளியின் வேகம் தான் இந்தப் பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும். எனவே, ஒளியின் வேகத்தை நம்மால் கற்பனை கூடப் பண்ண முடியாது.

இப்படி கற்பனையே பண்ணமுடியாத இந்த ஒளியின் வேகம், பூமியில் இருக்கும் வரை தான் பிரம்மாண்டமாக இருக்கிறது. விண்வெளியிலோ இந்த வேகம் மிகவும் சிறிதாகிவிடும். உதாரணத்திற்குச் சூரியனை எடுத்துக்கொள்வோம். பூமியில் இருந்து சூரியன் 149,600,000 km தூரத்தில் இருக்கிறது. ஆகவே, சூரியனில் இருந்து புறப்படும் ஒளி நமது பூமியை வந்தடைய ஏறத்தாழ 8 நிமிடங்கள் எடுக்கின்றது. என்ன 8 நிமிடங்களா? அப்படி என்றால் நாம் மேலே பார்க்கும் அந்தச் சூரியன் உண்மையில் 8 நிமிடங்களுக்கு முன்பு இருந்த சூரியன் தானா? ஆமாம், நாங்கள் எப்போதுமே 8 நிமிடங்களுக்கு முன்பு இருந்த சூரியனைத் தான் மேலே பார்க்கின்றோம். ஏன், இதோ இந்த நொடியில் கூட அந்தச் சூரியன் அழிந்துவிட்டால் நமக்கு 8 நிமிடங்களுக்குப் பின்பு தான் சூரியன் இல்லாமல் போனதே தெரியவரும்.

ஆகவே, மேலே குறித்தது போல் ஒளியின் வேகம் காரணத்தால் ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். இப்போது புரிகிறதா ஏன் நாம் எப்போதுமே இறந்தகாலத்தை மட்டுமே நமது கண்களால் பார்க்கின்றோம் என்று?

இல்லையா? சரி பரவாயில்லை, இந்த விஷயத்தை இப்படிப் பார்ப்போம். உங்களுக்கு முன்னால் உங்கள் நண்பன் ஒருவன் 1 மீட்டர் தூரத்தில் நிற்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். அவரை நாம் நமது கண்களால் பார்க்கவேண்டும் என்றால், ஒளி அவரில் பட்டுத்தெறித்து நமது கண்களை வந்தடையவேண்டும். குறிப்பாக  ஒளி அவரில் பட்டுத்தெறித்து சரியாக 1 மீட்டர் தூரம் சென்று நமது கண்களை அடைந்தால் மட்டும் தான் நமக்கு அவரைத் தெரியும். அப்படியென்றால் ஒரு நொடியில் 300,000 km (அல்லது 300,000,000 மீட்டர்) தூரம் செல்லும் ஒளி, 1 மீட்டர் செல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒளி ஒரு மீட்டர் செல்வதற்கு கிட்டத்தட்ட 0.000000003 நொடி எடுக்கும். சரி சரி, 0,000000003 நொடி என்றால் நம்மால் உணரக்கூட முடியாத ஒரு குறுகிய நேரம் தான், இருந்தாலும் அதுவும் ஒரு நேரம் தானே? ஆகவே, 1 மீட்டர் தூரத்தில் நிற்கும் உங்கள் நண்பனின் உருவத்தை 0,000000003 நொடிக்குப் பின்பு தான் உங்களது கண்களுடன் காண்கிறீர்கள். அதாவது, அந்த நண்பனின் உருவம் நிகழ்காலத்தில் இருந்தாலும், நீங்கள் உங்கள் கண்களால் பார்க்கும் அந்த உருவம் இறந்தகாலத்தில், குறிப்பாக 0,000000003 நொடிக்கு முன்பு இருந்த உருவமாகத் தான் இருக்கிறது.

நண்பர்களே, எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும், அது எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அந்தப் பொருளில் பட்டுத்தெறித்து வரும் ஒளி நமது கண்களை வந்தடைய, ஒளியின் வேகத்தின் காரணத்தால், ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். எனவே நான் ஆரம்பத்தில் கூறியது போல், நிகழ்காலத்தில் நாம் வாழ்ந்தாலும் நமது கண்களால் எப்போதுமே இறந்தகாலத்தை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்! இது மறுக்கமுடியாத ஒரு அறிவியல் உண்மை ஆகும்.

ஆக மொத்தத்தில், நிகழ்காலத்தையே நம்மால் ஒழுங்காகப் பார்க்கமுடியவில்லை, அதற்குள் விஞ்ஞானிகள் இறந்தகாலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு எப்படிப் பயணிப்பது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். சிந்தித்துப்பார்த்தால் நகைச்சுவையாக இல்லையா?

இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!

அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,
உங்கள் SciNirosh (Dr. Niroshan Thillainathan)
---------------------------------------------
இதைப் போல் வேறு அறிவியல் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் எனது YouTube Channelஐ Subscribe செய்யுங்கள்: https://www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Snapchat & Instagram: @SciNirosh

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H