பள்ளிக்குத் தேவையான கணினிகள், 3 கிலோவாட் யூ.பி.எஸ்., 10 மின் விசிறிகள், 25 ஸ்டூல்கள், மர அலமாரிகள், சிறிய மேசை நாற்காலிகள், நகல் எடுக்கும் இயந்திரம் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் விழாவில் பெறப்பட்டன.
குரல் தகவல் மூலம் பள்ளி செய்திகள் பெற்றோர்களுக்கு அறிவிப்பு
பள்ளி நிகழ்வுகளை பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வாய்ஸ் கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு நாளும் காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய அறிவிப்பு பெற்றோர்களைச் சென்றடைகிறது. மாணவர்களின் பிறந்த நாள், பெற்றோர் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு பள்ளியின் சார்பில் வாழ்த்துச்செய்தியும் அனுப்பப்படுகிறது.
இடப் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே பள்ளிக்கு அருகில் 5 சென்ட் இடத்தை ரூ.7 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இன்னும் வகுப்பறைகள் கட்ட ஆசை. படிப்பை வைத்து மட்டுமே எல்லோராலும் மிளிரமுடியாது என்பதால், மற்ற பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பெயர்பெறுவதை விட சிறந்த மனிதராக உருவெடுப்பதையே என்னுடைய ஆசிரியப் பணிக்கான அங்கீகாரமாகக் கருதுகிறேன்" என்று உறுதியோடு சொல்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.