'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய
திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. அரசு மற்றும்
அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி
இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதில், செயல்வழி
கற்றல் உள்ளிட்ட, பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், புதிதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களை இணைத்து, புதிய கற்றல் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.ஒவ்வொரு
மாவட்டத்திலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள, தலா ஒரு
பள்ளி, ஒரு குழுவாக இணைக்கப்படுகிறது. கிராமப்புற பள்ளியின், எட்டாம்
வகுப்பு மாணவர்கள், நகர்ப்புற பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன்
சேர்ந்து படிப்பர். பின், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்ப்பர்.
நகர்ப்புற மாணவர்களும், தங்களுடன் இணைந்த கிராமப்புற பள்ளிக்கு சென்று,
கிராமத்தை சுற்றி பார்ப்பர்.'மாணவர்களுக்குள் நட்புறவு ஏற்படுத்துதல்,
நகரம் மற்றும் கிராமப் புறங்கள், அங்குள்ள பள்ளிகளின் வசதிகளை மாணவர்கள்
தெரிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்' என, ஆசிரியர்கள் கூறினர்.
இதற்கு, 'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என, ஆசிரியர்கள் பெயர்
வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...