ஆக., 31 நிலவரப்படி, அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இதற்கு பின், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் எண்ணிக்கையை ஆய்வு செய்ய, தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான மாவட்ட வாரியான ஆய்வு, வரும், 31ல் துவங்கி, நவ., 21 வரை நடக்கிறது.








