தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு படையினர் செயல் விளக்கம் அளித்தனர்.
தீபாவளிப் பண்டிகையின் போது பல இடங்களில் தீ விபத்துகளும், சிலருக்கு தீக்காயங்களும் ஏற்படுவது வழக்கம். எனவே பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் தீவிபத்து ஏற்பட்டால் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கம்.
பட்டாசு
வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும்
தீயணைப்பு படையினர் விளக்கினார்கள். பின்னர் விபத்தில்லா தீபாவளி கொண்டாட
பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பட்டாசு வெடிக்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற தீயணைப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.
படடாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்; முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
குழந்தைகளை சட்டைப் பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே வெடிக்கச் செய்யுங்கள்.
ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்கச் செய்யுங்கள்.
வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசு வெடிக்கும் போது ஒருவாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்பிற்காக இருக்கட்டும்.
நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். கைகளில் பிடித்து வெடிக்கும்போது தூக்கி எரியும் சாகசங்களை செய்ய வேண்டாம்.
எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள்; உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்; அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்; இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்; உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பட்டாசு வெடிக்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற தீயணைப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.
படடாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்; முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
குழந்தைகளை சட்டைப் பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே வெடிக்கச் செய்யுங்கள்.
ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்கச் செய்யுங்கள்.
வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசு வெடிக்கும் போது ஒருவாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்பிற்காக இருக்கட்டும்.
நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். கைகளில் பிடித்து வெடிக்கும்போது தூக்கி எரியும் சாகசங்களை செய்ய வேண்டாம்.
எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள்; உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்; அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்; இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்; உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...