மத்திய
அரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும்
2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில்
கிடைக்கிறது. ரூ.500
இதுவரை தமிழகத்துக்கு
வந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரை
விற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும்
கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டு
பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி
வருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50
நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்த
போதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை.
இதனால் புதிய ரூ.500 நோட்டு
வினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர
தீர்வு காண முடியும் என்ற
சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால்,
தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டு
எப்ேபாது வரும் என்பது தொடர்ந்து
கேள்விக்குறியாகி வந்தது. இது குறித்து
அந்த அதிகாரிகள் கூறுகையில்,
“ புதிய
ரூ.500 நோட்டு ஒரு சில
மாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டு
உள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்த
பணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர்
அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில்
புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்பட
வாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து
வருகிறோம்” என்றார்.