நாடு முழுவதும் ஒரே விதமான ஓட்டுனர் உரிமம் விரைவில் அறிமுகம்.
நாடு முழுவதும் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், புதிய மென்பொருளை
பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக, ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கும்
முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 'தமிழகத்தில் கூடுதலாக, 12
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருள், இந்த
மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும்' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதற்கு வசதியாக, நாடு முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இம்மாதம்... : சென்னை தென்மேற்கு, செங்குன்றம், கிருஷ்ணகிரி, நாமக்கல் வடக்கு, விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, மதுரை வடக்கு, சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், மயிலாடுதுறை ஆகிய, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இம்மாதம் வாகன், சாரதியின், 4.0 வெர்ஷனின் செயல்பாடு அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழகம்
உள்ளிட்ட, 14 மாநிலங்களில் உள்ள, 175 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்,
'வாகன், சாரதி' என்ற, மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வாகன் மென்பொருள், வாகனங்களை பதிவு செய்யவும், 'சாரதி'யானது, ஓட்டுனர்களின் பதிவுகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கி வருகிறது. தேசிய தகவலியல் மையமான, என்.ஐ.சி., பொறியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, மென்பொருள் செயல்பாடு குறித்த பயிற்சி அளித்தனர். ஆனாலும், சோதனை முயற்சியாக, தமிழகத்தில், 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மட்டுமே, இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இம்மாதத்தில்
கூடுதலாக, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இந்த மென்பொருள்கள்,
புதிய அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 'சாரதி, 4.0 வெர்ஷன்'
மூலம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும்,
'வாகன்' மென்பொருள் மூலம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இவற்றில் உள்ள தகவல்கள், டில்லியில் உள்ள, என்.ஐ.சி., சர்வரில்
பாதுகாக்கப்படும். இது, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள, கம்ப்யூட்டர்
தகவல்களை, இணையதளம் வாயிலாக இணைக்கும். இதனால், ஒரு மாநிலத்தின் வாகனம்
மற்றும் வாகன ஓட்டியின் தகவல்களை, மற்ற மாநிலங்களிலும் சரிபார்க்க
முடியும். போலி வாகனம், போலி ஓட்டுனர் உரிமத்தை எளிதாக கண்டுபிடிக்க
முடியும்.வாகன் மென்பொருள், வாகனங்களை பதிவு செய்யவும், 'சாரதி'யானது, ஓட்டுனர்களின் பதிவுகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கி வருகிறது. தேசிய தகவலியல் மையமான, என்.ஐ.சி., பொறியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, மென்பொருள் செயல்பாடு குறித்த பயிற்சி அளித்தனர். ஆனாலும், சோதனை முயற்சியாக, தமிழகத்தில், 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மட்டுமே, இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதற்கு வசதியாக, நாடு முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இம்மாதம்... : சென்னை தென்மேற்கு, செங்குன்றம், கிருஷ்ணகிரி, நாமக்கல் வடக்கு, விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, மதுரை வடக்கு, சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், மயிலாடுதுறை ஆகிய, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இம்மாதம் வாகன், சாரதியின், 4.0 வெர்ஷனின் செயல்பாடு அமலுக்கு வருகிறது.