ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
ஆசிரியர்
நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல்
படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலோசனை
கூட்டம்
பெரம்பலூரில்
தமிழ்நாடு பி.எட் கணினி
அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன்
தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்
முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள்
சங்க மாநில தலைவர் அருள்ஜோதி
வாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர்
குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு பேசினார்.
ஆசிரியர்
நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற
தேர்வுகளில் பி.எட் கணினி
அறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் பிற
பாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல்
பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கென
கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
காலிபணியிடம்
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணை
இயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல்
ஆசிரியர் பணி காலியிடம் குறித்து
அறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவே
பி.எட் கணினி அறிவியல்
தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம்
செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில்
மாநில துணை செயலாளர் புகழ்,
தலைமை ஆலோசகர் கண்ணன் உள்பட
பலர் கலந்து கொண்டனர். முடிவில்
மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.