செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடு வதற்கு முன், 200 கோடி எண்ணிக்கை உடைய, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட்டன.இந்த, நான்கு லட்சம் கோடி ரூபாய் தான், முதலில் புழக் கத்தில் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள், புதிய நோட்டுகளை அதிக அளவில் கையில் இருப்பு வைக்கத் துவங்கி யுள்ளனர். தற்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பணத் தட்டுப்பாடு குறைந்துள்ளது. வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கூட்டம் குறைந்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் மாற துவங்கி யுள்ளதால், கையில் ரூபாய் நோட்டுகள் வைத்துக் கொள்வது குறைந்துள்ளது. இதனால், புதிய ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் மக்கள் டிபாசிட் செய்து வருகின்றனர்.
தற்போதைய கணக்கின்படி, புழக்கத்தில் விடப் பட்ட, புதிய ரூபாய் நோட்டுகளில், 50 சதவீதம் நோட்டுகள், வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டுள் ளன. இது, 80 சதவீதத்தை தாண்டும் போது தான்,
முதல்கட்டமாக, கூட்டுறவு வங்கிகளுக்கும், பின்னர் மற்ற வங்கிகளுக்கும் இந்தக் கட்டுப் பாடு தளர்த்தப்படும். தேவைக்கேற்ப, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி, தீவிர மாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், பணத் தட்டுப்பாடு முழுமையாக குறைந்து, மக்கள் பணத்தை டிபாசிட் செய்வது அதிகரிக் கும். அடுத்த மாத துவக்கத்தில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.








