புற்றுநோய் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள்
மூச்சு
விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த
சளி வருவது, நீண்ட நாள்
தொடர் இருமல் ஆகியவை, இந்நோயின்
அறிகுறிகள். புகை பழக்கத்தை
கைவிடுவது,
சுகாதாரமான சூழ்நிலையில் வசிப்பது போன்ற நடவடிக்கைகளால், நுரையீரல்
புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயை குணப்படுத்திவிடலாம் என, மருத்துவர்கள் திரும்ப
திரும்ப சொன்னாலும், இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளன.
வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஆண்களும், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்
புற்றுநோய்க்கு, பெண்களும், அதிகம் ஆளாவதாக, புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.








