எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு:GO - 25 , நாள்:13.01.17

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த
நாளுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்ள்ளது. எம்.ஜி.ஆர்.
பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி செவ்வாய்கிழமை பொதுவிடுமுறையாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.
விடுமுறையை அடுத்து ஜனவரி 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு
அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற நிறுவனங்களும் விடுமுறை அளிக்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
17-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து 4
நாட்கள் விடுமுறை ஆகும்.
பதக்கங்கள் அறிவிப்புபொங்கலை முன்னிட்டு 1685
காவலர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதக்கம் வழங்குவார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர், மற்றும் தலைமை காவலர் நிலைகளில் 1500
பேருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 119 பேருக்கு பதக்கம்
அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறையில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை
வார்டனுக்கு 60 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோருக்கு
ரூ.200 மாதாந்திர பதக்கப்படியாக வழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர்
செல்வம் அறிவித்துள்ளார்.