கடந்த 2016-ல் மதுரை மாநகரில் விபத்து்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 225 பேர். இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்து இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாதவர்கள். ஆகவே தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்வது மட்டுமின்றி, உங்களின் உற்றார், உறவினர்களும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய அறிவுரை வழங்கவேண்டும்.2016-ல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 1,34, 954 பேர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்அனைவரும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் பொருட்டு மதுரையில் நாளை (ஏப்.,1) முதல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அனைவர் மீதும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்தல், ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.








