அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வித்தரம், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள் விகிதம், கல்லுாரிகளின் ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய அளவில், 'நாக்' அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வொரு கல்லுாரியும், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின், இந்த அந்தஸ்தை பெறுவது கட்டாயம்.
இதன்படி, மார்ச் மாதம் வரை, 1,400 கல்வி நிறுவனங்களுக்கு, நாக் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் நடந்த கமிட்டியின் பரிசீலனையில், தமிழகத்தில், புதிதாக எட்டு கல்லுாரிகளுக்கு, 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லுாரி, திருச்சியிலுள்ள ஈ.வெ.ரா., பெரியார் கல்லுாரி மற்றும் கோவை விமானப்படை நிர்வாகக் கல்லுாரி ஆகியவை, 'ஏ' கிரேடு பெற்று உள்ளன. மேலும், ஐந்து தனியார் கல்லுாரிகள், பி, பி பிளஸ் தரம் பெற்றுள்ளன.
- நமது நிருபர் -








