இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்துறையில் செயலாளர் உதயச்சந்திரன் பல்வேறு மாற்றங்கள், புதுமைகளை செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தான் 'தொன்மை பாதுகாப்பு மையம்' ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழக நாகரிகம் மிக தொன்மையானது. மதுரை அருகே உள்ள கீழடி போல், பல மாவட்டங்களில் வரலாற்று சின்னங்கள், பழங்கால பொருட்கள், அரிய கல்வெட்டுக்கள், முதுமக்கள் தாழி போன்றவை பூமிக்கடியில் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை தொல்லியல் துறையினர்
அவ்வப்போது கண்டுபிடிக்கின்றனர். இவை பழங்கால நாகரிகம், பண்பாடு,
மக்களின் வாழ்வியலை பறைசாற்றுகின்றன.
இதுதொடர்பாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இம்மன்றங்களை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார். வரலாற்று பாடத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்களையே இம்மன்றங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.








