இந்த புண்ணிய பூமியிலே சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவருடையை வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து வந்து 1897-ல் இந்த புண்ணிய மண்ணில் கால் பதித்தார். இந்தியாவினுடைய மகத்தான மகான் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை நமக்கு தந்திருக்கிறது. ராமேஸ்வரம் மண்ணிலே பிறந்த அப்துல் கலாம், மிகவும் அமைதியான ஆழமான சிந்தனையாளராக இருந்திருக்கிறார். கலாம் அவர்கள் மறைந்த போது நான் ஒரு வாக்குறுதி தந்திருந்தேன். அவருடைய நினைவினை பறைசாற்றும் வகையில் பெரிய நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் என்றேன். மிக விரைவிலேயே அவருக்கான நினைவிடம் இங்கு அமைந்திருக்கிறது என்பதை பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறேன். DRDO மிக குறுகிய காலத்திலேயே கலாம் மணிமண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்த பல தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து மணிமண்டபம் அமைக்க உதவியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தால் அயராது உழைத்த தொழிலாளர்களை வெகுவாக பாராட்டியிருப்பார் என்றார். ஜெயலலிதா நம்முடன் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் மக்கள் கலாம் மணிமண்டபத்தை தவறாமல் பார்வையிட்டு செல்ல வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். ராமர் பிறந்த அயோத்தியுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இன்று ரயில்வே சேவை துவக்கப்பட்டுள்ளது. ‘
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. எனவே தான் அவர்க-ளுக்கு தற்போது ஆழ்கடல் மீன்பிடி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாற்றத்தை ஏற்படுத்தும் அரசாங்கம் டெல்லியில் அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களின் பல ஆண்டு கனவான தனுஷ்கோடி சாலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பசுமை ராமேஸ்வரம் திட்டத்தால் இப்பகுதி மேலும் மேம்படும்.








