முக்கியமான அறுவைசிகிச்சை செய்ய அரசு மருத்துவமனைகளில் நேரம் கிடைக்கவில்லை என்றால், தனியார் மருத்துவமனைகளிலேயே இலவசமாக
அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம்’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று ஜூலை 8ஆம் தேதி மருத்துவத் திட்டம் ஒன்றை தொடங்கிவைத்து
பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “அரசு மருத்துவமனைகளில்
உயிர்காக்கும் அறுவைசிகிச்சைகளுக்குத் தேதி கிடைக்காமல் நீண்ட நாள்களாக
காத்திருக்கும் நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு, அரசு
செலவில் இலவச அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படும். நோயாளிகளின்
பொருளாதார தரத்தைப் பார்க்காமல், சிறந்த மருத்துவ வசதிகளைச் செய்து தரவே
இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்.
டெல்லி, நொய்டா, குர்கவான், ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் இத்திட்டத்தைச்
செயல்படுத்த 48 தனியார் மருத்துவமனைகளை அரசு அடையாளம் கண்டுள்ளது. 24 அரசு
மருத்துவமனைகளில் தேதி கிடைக்காத நோயாளிகள், இந்த தனியார் மருத்துவமனையில்
அறுவைசிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கு பைபாஸ் அறுவைசிகிச்சை, கிட்னி,
தைராய்டு உள்ளிட்ட 54 உயிர்காப்பு அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம்
என்று டெல்லி அரசு அடையாளப்படுத்தியுள்ளது.
மாநில அரசு ஒன்று இத்ததகைய திட்டத்ததை அறிவிப்பது இதுவே முதன்முறை. இன்றைய
தினத்தில் நோயைப் பற்றிய கவலையை விட, அதன் சிகிச்சைக்கு என்ன
செய்யப்போகிறோம் என்ற கவலைதான் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில்
நோயாளிகள் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளிகளும் சிறந்த மருத்துவச்
சிகிச்சையை டெல்லி அரசு உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...