கோட்டையை உலுக்கும் உறுதிச்சந்திரன்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கோட்டையை உலுக்கும் உறுதிச்சந்திரன்!

ரன்சிவாதிகளின் கண் பட்டுவிட்டதால் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் எந்த நிமிடமும் மாற்றப்படலாம். ‘எந்த நல்லதும் நெடுநாளைக்கு நடக்காது, நல்ல விஷயங்களை நடக்க விடமாட்டார்கள்’ என்பதற்கு உதாரணமாக உதயசந்திரனுக்கு நடந்துவரும் அனுபவங்களைச் சொல்லலாம்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன், உதயசந்திரனை அத்துறையின் செயலாளர் ஆக்கினார். இருவரும் இணைந்து கோமா நிலையில் கிடந்த பள்ளிக் கல்வித் துறைக்கு உயிர்கொடுத்து, தேவையான மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அ.தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கூட, பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் பாராட்டுகின்றனர்.
‘10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ரேங்கிங் என்று முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடல், 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, ஆசிரியர் - மாணவர் வருகைப் பதிவேட்டை பயோமெட்ரிக் முறைக்கு மாற்றுதல், சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி, நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தகுதித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி, 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பள்ளிப் பாடங்களை மாற்றுதல், கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை ஆன்லைன் மூலம் நிரப்புதல், ஆசிரியர்களுக்குப் பொது இடமாறுதல் கவுன்சலிங்... என்று பள்ளிக்கல்வித் துறையில் கொண்டு வந்துள்ள அதிரடி மாறுதல்கள் எல்லாம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் உதயசந்திரனை ‘இன்று மாற்றப் போகிறார்கள்’, ‘நாளை மாற்றப் போகிறார்கள்’ என்று கோட்டை வட்டாரம் கிசுகிசுக்க ஆரம்பித்தது.
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு இவர் உடன்படவில்லை’ என்று இதற்குக் காரணமும் சொல்லப்படுகிறது. ‘‘ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சலிங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார் உதயசந்திரன். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், பி.ஏ-க்கள், புரோக்கர்கள் தலையீடு இல்லை. இந்தக் கவுன்சலிங் முடிந்த பிறகு, 1,300 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் போட வேண்டும் என்று மேல் மட்டத்தில் இருப்பவர்கள் உதயசந்திரனுக்குச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு இவர் மறுத்துவிட்டார். இந்த இடங்களுக்கு தலா 3 முதல் 5 லட்ச ரூபாய் வரை வாங்கி இருக்கிறார்கள். இந்த மோதல் சில வாரங்களாகவே நடந்து வந்தது.

மொத்தமாக இவர் ‘முடியாது’ என்றதும் 300 பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்து, ‘இந்த ஆசிரியர்களுக்காவது இடமாறுதல் போட்டுக் கொடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதையும் மறுத்துவிட்டார். அதன்பிறகு 69 பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்து இடமாறுதல் போட்டுத் தரச்சொல்லி இருக்கிறார்கள்.

அதையும் செய்ய முடியாது என்றவர், ‘ஆசிரியர்கள் இடமாறுதலை வெளிப்படையாகச் செய்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஏற்கெனவே, இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் செய்தது போல கவுன்சலிங் மூலம் மீண்டும் செய்துவிடலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இது மேலிடத்துக்குப் பிடிக்கவில்லை.

‘எப்படியாவது இவரைத் தூக்குகிறோம்’ என்று சில அமைச்சர்களின் பி.ஏ-க்கள் புஜம் தட்டினார்கள். மேலிடத்தில் இருந்து பேசிய ஒருவர், ‘சிலருக்கு மட்டும் டிரான்ஸ்ஃபர் போடுவதால் எதுவும் ஆகிவிடாது’ என்று சொல்ல, ‘கவுன்சலிங் இல்லாமல் ஒருவருக்கு பணிமாறுதல் கொடுத்தாலும் தவறுதான்’ என்று உதயசந்திரன் சொன்னாராம்.

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் இடமாறுதல், பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல், பள்ளிகளுக்குத் தடையில்லாச் சான்றிதழ் கொடுத்தல் என்று பல வேலைகளுக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். உதயசந்திரன் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் முறைக்குக் கொண்டுவந்தார். அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக்கினார். இதையும் இந்த வட்டாரம் விரும்பவில்லை.

பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளார்கள். இவர் ஏற்கெனவே நிதித்துறையில் இருந்ததால் சாமர்த்தியமாக நிதி பெற்றுவிட்டார். உதயசந்திரன் இருந்தால் இதில் லாபம் பார்க்க முடியாது என்பதால் அவரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த நினைக்கிறார்கள்” என்று சொன்னார்கள் பள்ளிக்கல்வி துறை வட்டாரத்தினர்.

பள்ளிக்கல்வித் துறை விழா ஒன்றில் கலந்துகொண்ட உதயசந்திரன், மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய அறிவுசார் பணிகள் குறித்து ஒன்றரை மணி நேரம் பேசினார். அந்தப் பேச்சில், ‘‘பள்ளிக்கூடங்களில் திறமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் பள்ளிக்கூடத்தில் இருந்தேதான் பிரச்னைகள் வரும்.

 அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை எப்போதும் போல கவனமுடன் செய்ய வேண்டும். உங்களுக்கு அந்தப் பிரச்னை மனவேதனையைத் தந்துகொண்டு இருக்கிறது என்று நினைத்தால் அதை நீங்கள் என்னிடம் சொல்லலாம். உங்களது செயல்பாடுகளைக் கோட்டையில் இருந்து இரண்டு கண்கள் கவனித்துக்கொண்டு இருக்கின்றன. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது’’ என்று பேசினார். இதைக் குறிப்பெடுத்த உளவுத்துறை, தனது குறுக்குப் புத்தியைக் காட்டிவிட்டதாம்.

‘இரண்டு கண்கள் என்று அமைச்சரைக் குறிப்பிடாமல் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார்’ என்று ஒன்றரை மணி நேரப் பேச்சில் ஒரு நிமிடத்தை மட்டும் அமைச்சருக்குப் போட்டுக் காட்டியதாகவும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் உதயச்சந்திரன் பதவிக்கு வேட்டு வைக்கக் காத்திருக்கின்றன.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H