TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். மறு அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வானது செப்டம்பர் மாதம்16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.








