இதன்படி, '2018, ஜன., 7ல், கணினி வழி தேர்வாக, முதுநிலை, 'நீட்' மற்றும், எம்.டி.எஸ்., 'நீட்' தேர்வுகள் நடக்கும்; தேர்வு முடிவுகள், ஜன., 31ல் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இந்த தேர்வு, நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது.
அதேபோல், அனைவருக்கும் ஒரே வினாத்தாள் இடம் பெறும். 'மாடரேட்டிங்' என்ற மதிப்பெண் சமப்படுத்தும் முறை எதுவும் கிடையாது. ஒவ்வொரு கேள்வியின் சரியான பதிலுக்கும், நான்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு கேள்வியின் தவறான பதிலுக்கும், தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். முயற்சிக்காத கேள்விக்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது.
முதுநிலை, 'நீட்' தேர்வு, 2016 வரை, நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக, எட்டு நாட்கள் நடத்தப்பட்டது. ஆனால், வரும் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வினாத்தாள், ஒரே நாள் என, தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு, http://nbe.edu.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.








