மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர்
நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576
மாவட்டங்களில் செயல்படுகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், உண்டு,
உறைவிட பள்ளிகளாக, அவை செயல்படுகின்றன. இவற்றில், மும்மொழி கொள்கை
பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், நவோதயா பள்ளிகள் மற்றும் மண்டல
அலுவலகத்தில், காலியாக உள்ள, எட்டு பதவிகளில், 683 இடங்கள் நிரப்பப்பட
உள்ளன. இதற்கான அறிவிப்பை, நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது.
தணிக்கை உதவியாளர், சுருக்கெழுத்தர், ஹிந்தி மொழி பெயர்ப்பாளர், பெண்
செவிலியர், கீழ் நிலை எழுத்தர், கிடங்கு காப்பாளர், ஆய்வக உதவியாளர்
மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பதவிகளில், ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பதவியில் சேர விரும்புவோர், டிச.,13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கான விபரங்களை, www.nvshq.org / www.nvsnt2017.org என்ற இணையதளங்களில்
தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...