ஒவ்வொரு மாவட்டத்திலும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா
அழைத்து செல்ல, உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி
இயக்குனர், இளங்கோவன், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாவட்டத்திலுள்ள
சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், 50
மாணவர்கள், 50 மாணவியரை தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்துச்
செல்ல வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில்,
அருங்காட்சியகம், விலங்கியல், தாவரவியல் பூங்கா, வரலாற்று
சிறப்பு மிக்க இடங்கள், கோவில், அரண்மனை, பறவைகள் சரணாலயங்கள்
உள்ளிட்ட இடங்களுக்கு, அழைத்து செல்லலாம். இதற்கு, ஏழாம் வகுப்பு
முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, படிப்பில் சிறந்து விளங்கும், ஏழை, எளிய
மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
கடற்கரை, நீர்நிலைகள், படகு பயணம், மலை ஏற்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...