கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற
மதுரை கிளைக்கும் நாளை (டிசம்பர் 23) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2016 டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2017 ஜனவரி 1ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. டிசம்பர் 29 ஆம் தேதியன்று நீதிமன்றம் செயல்பட்டது. அவசரம் கருதித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வைத்தியநாதனும், வி.பார்த்திபனும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு கே.கல்யாணசுந்தரமும், ஆர்.மகாதேவனும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








