தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள்
செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இது தொடர்பாக
வெளியிட்டப்பட்ட அரசாணையில்,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளரின்
கருத்துருவினை ஆய்வு செய்த பின் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம்
அல்லது பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்ஃபில் மற்றும் பி.எச்.டி
பட்டங்கள், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,
கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்
பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.