மத்திய அரசின் கீழ் செயல்படும், 'நேஷனல் டிரஸ்ட்' எனும் தேசிய அறக்கட்டளை
சார்பில், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளின்
கீழ்,
கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் இந்தியா ஹெகத்தான்- 2017' என்ற தலைப்பில் தேசிய அளவில், போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், கண்டுபிடிப்புகளை
வடிவமைக்க, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு
வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆராய்ச்சி கருத்துருக்கள் தெளிவான விபரங்கள், வடிவமைப்புகளுடன்,
2018 பிப்.,1ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின்
கண்டுபிடிப்புகள் கல்லுாரிகள் மூலமேஅனுப்பப்பட வேண்டும்.தேர்வு பெறும்,
கண்டுபிடிப்புகளுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும், தெளிவான
விபரங்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இணையதளத்தில்
பார்க்கலாம்.







