▪காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் திருவாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
▪நாகை மாவட்டம் பாப்பாகோவில் கஸ்தூரி ரெங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
▪காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருத்தேர் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
▪விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
▪சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை புதுவயலில் உள்ள வல்லப மஹா கணபதி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
▪நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கடுவங்குடியில் உள்ள சீதளா மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
▪கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு அருகே வாறுதட்டு கிருஷ்ணசுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேரந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
▪தூத்துக்குடி பத்ரகாளி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
▪காஞ்சிபுரம் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை பெரியதம்பிரான் மற்றும் வேதவன்னீஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
▪நீலகிரி மாவட்டம் குன்னூரில் செபஸ்டியர் ஆலய விழாவையொட்டி நடைபெற்ற புனித செபஸ்டியரின் திருவீதி உலாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
▪தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புனித பிரகாசியம்மாள் ஆலய திருவிழா விமரிசையாக நடைபெற்றது







