இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ன்படி, அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் குடும்பத்தின் சொத்தில் பங்கு பெறும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அஷோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்திருக்கும் உத்தரவில், தந்தையின் சொத்தில் மகளுக்கும் பங்கு அளிக்க வகை செய்யும் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ன் படி, குடும்பத்தின் சொத்தில் மகனுக்கு இருக்கும் அதே உரிமை மகளுக்கும் இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்தில் பங்களிக்க வகை செய்யப்பட்டது. ஆனால், அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு 2005ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு என்று வரையறுக்க இயலாது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அஷோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்திருக்கும் உத்தரவில், தந்தையின் சொத்தில் மகளுக்கும் பங்கு அளிக்க வகை செய்யும் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ன் படி, குடும்பத்தின் சொத்தில் மகனுக்கு இருக்கும் அதே உரிமை மகளுக்கும் இருப்பதாகக் கூறியுள்ளது.
சொத்து விவகாரத்தில், மகனுக்கு இருக்கும் அதே உரிமையை மகளுக்கும் அளித்து வகை செய்யும் இந்த சட்டத்திருத்தம், சம உரிமை கோரும் போராட்டத்தின் ஒரு மைல்கல்லாக உள்ளது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு இரண்டு சகோதரிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தங்களது சகோதரர்கள் சொத்தில் பங்கு தர மறுத்ததால், 2 சகோதரிகளும் பல ஆண்டுகாலமாக நீதிமன்றத்தில் போராடி வருகிறார்கள். 2005ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு முன்பு பிறந்த இவர்களுக்கு சொத்தில் பங்கில்லை என்று கூறி கடந்த 2007ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் இவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. இவர்களது மேல்முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு பெண்ணுக்கு சொத்தில் பங்கு அளிப்பதை, அவர் எந்த ஆண்டில் பிறந்தார் என்பதை வைத்து தீர்மானிக்க முடியாது என்றும், ஒரு தந்தையின் சொத்தில் மகனுக்கு இருக்கும் அதே உரிமை மகளுக்கும் இருப்பதையே அந்த சட்ட திருத்தம் உறுதி செய்கிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.