குமரியில் கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று பதிவாக வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியிருந்தது. இப்போது இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சாதாரணமாக அனுபவிக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக மே மாதமே இந்த அளவு வெப்பம் இருக்கின்ற நிலை மாறி மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதும், இரவு நேரங்களிலும் வெப்பம் தகிப்பதும் மக்களை கடுமையாக வாட்டத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் ஓகி புயல் வேளையில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல ஆயிரக்கணக்கான மரங்கள் மீண்டும் வளர்த்தெடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பசுமை போர்த்திய நிலையில் காணப்பட்ட பகுதிகள் வெட்ட வெளியாக மாறியுள்ளதும், கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் தொடக்கத்திலேயே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
குமரியில் கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று பதிவாக வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியிருந்தது. இப்போது இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சாதாரணமாக அனுபவிக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக மே மாதமே இந்த அளவு வெப்பம் இருக்கின்ற நிலை மாறி மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதும், இரவு நேரங்களிலும் வெப்பம் தகிப்பதும் மக்களை கடுமையாக வாட்டத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் ஓகி புயல் வேளையில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல ஆயிரக்கணக்கான மரங்கள் மீண்டும் வளர்த்தெடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பசுமை போர்த்திய நிலையில் காணப்பட்ட பகுதிகள் வெட்ட வெளியாக மாறியுள்ளதும், கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் தொடக்கத்திலேயே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.








