அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (AIEEA) தேதி குறித்த அறிவிப்பை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) (ICAR) வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்பில் சேர மாணவர்களுக்கு அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) (ICAR) நடத்துகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பது மட்டுமின்றி கல்விச் செலவுகளுக்காக உதவி தொகையும் வழங்கப்படுகிறது.
2018-ம் ஆண்டுக்கான அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.ஏ.ஆர் வெளியிட்டுள்ளது. அதில் +2 முடித்த மாணவர்களுக்கு மே 12 ம் தேதி சனிக்கிழமை தேர்வு நடைபெறும். முதுநிலை படிப்புக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும் மே 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வு நடைபெறும்.
கல்வி தகுதி :
இளநிலை UG படிப்பில் சேர
+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் தற்போது படித்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் +2 வகுப்பில் இயற்பியல், வேதிதியல், உயிரியல் அல்லது வேளாண்மை, கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.
முதுநிலை PG படிப்பில் சேர
வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு : http://www.icar.org.in








