பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சத்துணவு முட்டைகள் தேக்கம் அடைந்து, கொள்முதல் விலை சரிந்துள்ளது.
நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ---- நெக் -
நிர்ணயிக்கும் விலைக்கே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. ஏப்., 16ல்,
360 காசு என, கொள்முதல் விலைநிர்ணயம் செய்யப்பட்டது.ஆழ்கடலில் மீன்பிடி
தடைக் காலம் அமலுக்கு வந்ததால், விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது, 10
காசு சரிந்துள்ளது.
பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில், வெயில் காரணமாக,
தினமும், 15 சதவீதம் முட்டை உற்பத்தி சரிந்து வருகிறது. ஆழ்கடலில் மீன்
பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில், முட்டை கொள்முதல்
விலை உயர்ந்து வந்தது.இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
அளிக்கப்பட்டதால்,சத்துணவுக்கு வினி யோகம் செய்யப்படும் முட்டைகள்
தேங்கியுள்ளன. இதனால், கொள்முதல் விலையை குறைக்கவேண்டிய நிலைக்கு
பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது, மேலும் குறைய வாய்ப்பு
உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...