அமைச்சர், ராஜலட்சுமி: ஜெயலலிதா செயல்படுத்திய பல்வேறு திட்டங்களால், ஆதிதிராவிட மக்கள் மத்தியில், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களை விட்டு, அவர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்வதால், அங்குள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர்.இதனால் தான், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சேர்க்கை குறைந்துள்ளது.
பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன்: ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறது. பள்ளிகளில், கல்வித் தரம் குறையவில்லை.
உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன்: நாட்டில் சராசரியாக, 21.1 சதவீதம், ஆதிதிராவிட மாணவர்கள், உயர் கல்வி பெறுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, இது, 38.3 சதவீதமாக உள்ளது.இதன் மூலம், ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி குறையவில்லை என்பது தெரிகிறது.








