நீட் தேர்வு தொடர்பான மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை அமல்படுத்த
மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களை ஏற்படுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடித
விவரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற
மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தவறாக மொழி பெயர்க்கப்பட்டு
கேட்கப்பட்ட கேள்விகளுக்காக தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள்
அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், தமிழில் நீட் தேர்வெழுதிய 24,000-க்கும்
மேற்பட்ட மாணவர்கள் பலன் அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்படாமல் இருக்க... நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை
அமல்படுத்தும்போது, ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள தமிழில்
நீட் தேர்வெழுதிய மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், தமிழகத்திலுள்ள
மருத்துவக் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு
விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...