தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்
தமிழரின் பாரம்பரியக் கலைகள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்குப்
பயிற்சி அளிக்கப்பட்டுவருகின்றன.
தமிழக அரசு இந்த ஆண்டு ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம்
வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. அவற்றில் ஒன்பதாம் வகுப்பு
ஆங்கிலப் புத்தகத்தில் ‘இலக்கை நிர்ணயித்தல்’ என்ற தலைப்பில்
சிலம்பாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட தமிழர் கலைகள் குறித்த
பாடம் உள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தை தஞ்சை அருகே பூண்டி கிராமத்தில் உள்ள அரசு
உயர்நிலைப் பள்ளியானது சிலம்பாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட
தமிழர் கலைகள், செயல்முறை விளக்கத்துடன் கற்பித்துவருகிறது. மாணவர்களுக்கு
புரொஜக்டர் திரை மூலமாக கலைகள் குறித்த வீடியோக்களை ஒளிபரப்பி ஆசிரியர்கள்
விளக்கம் அளிக்கின்றனர். வகுப்பிலேயே அவர்களை மேடையேற்றி அரங்கேற்றம்
செய்யவும் வைக்கின்றனர்.
கலைகள் குறித்துப் பயிற்சியளிக்கத் துறை சார்ந்த கலைஞர்கள் வெளியிலிருந்து
வரவழைக்கப்படுகின்றனர். மாணவர்களில் யாருக்கேனும் ஏதேனும் கலை குறித்துத்
தெரியும் என்றால் அவர்களைக் கொண்டே அந்தக் கலைக்கான பயிற்சி
அளிக்கப்படுகிறது.
செயல்முறை விளக்கத்தின் மூலம் கற்பிக்கப்படுவதால் இந்தக் கலைகளை மாணவர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...