திருக்குறள்
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
விளக்கம்:
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது.
பழமொழி
Be a Roman when you are in Rome
உலகத்தோடு ஒத்து வாழ்
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்திற்கு நாம் தரக்கூடிய ஒரே இலக்கணம்.
- விவேகானந்தர்
பொது அறிவு
1.மாரத்தான் ஓட்டம் என்பது எவ்வளவு தூரம்?
42.195கிலோமீட்டர்
2.2018 காமன்வெல்த் போட்டிகள் எங்கு நடைபெற்றன ?
ஆஸ்திரேலியா
English words and. Meanings
Religion. மதம்
Recommend பரிந்துரை
Release. விடுவித்தல்
Radiation. கதிர்வீச்சு
Reminder. ஞாபகப்படுத்துதல்
நீதிக்கதை
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து
வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும்,
வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த
சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.
சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.
யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று
வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த
மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும்
உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க
முடிவுசெய்தது.
உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.
“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.
நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.
“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக
மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா?
அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான்
உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.
நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.
சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு
விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப
சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து
பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.
சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை
எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?
எங்க போயிட்ட?” என்றது.
“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.
“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.
“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக்
கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு
செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.
“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ
போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு
மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது
நரி.
அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.
நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப்
பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல்
மந்திரி” என்று கூறியது.
கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி
சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு
அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.
சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க.
என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?”
என்று சிங்கத்திடம் நரி கூறியது.
சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.
நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.
குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று
கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே
இல்லையே?” என்று சிங்கம் கேட்டது.
“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.
சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.
“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.
நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.
இன்றைய செய்திகள்
28.08.18
* சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள 15 வழித்தடங்களில் மின்சாரப்
பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை மாநகா் போக்குவரத்துக்
கழகம் அறிவித்துள்ளது.
* இருசக்கர வாகன பயணத்தின் போது, வாகன ஓட்டியும், பின்னால் பயணிப்போரும்
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
* இந்தியாவில் முதல்முறையாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று
உயிரி (பயோ) எரிபொருள் மூலம் திங்கள்கிழமையன்று இயக்கப்பட்டுள்ளது.
* ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
Today's Headlines
🌸Belagavi:Continuing its practice of encouraging rural residents to
gift toilets to their sisters on Raksha Bandhan festival, the Belagavi
Zilla Panchayat handed over 300 toilets to beneficiaries in Belagavi on
Sunday. From morning, panchayat officials were busy organising small
functions near houses of beneficiaries🌹
🌸New Delhi:All coaches of the Indian Railways will now display the logo
of the Swachch Bharat project and the national flag as part of the
national transporter’s plans to celebrate the 150th birth anniversary of
Mahatma Gandhi🌹
🌸Chennai:Electric buses may soon ply on select routes in the city. On
Friday, Transport Minister M.R. Vijayabhaskar chaired a high-level
meeting of transport officials and a C40 Cities Clean Bus Declaration
team at the Secretariat.💐
🌸 Coimbatore:Public can get unlimited net access from 7 a.m. to 9.30 p.m.
Visitors to VOC Park here can now enjoy WiFi connectivity free of cost,
thanks to the presence of a “golden tree” or “smart tree”.💐
🌸Madurai:In a bid to increase the population of palm trees, which has
reduced over the past many decades, different groups of volunteers
carried out a palm seeds plantation drive on the banks of Sellur and
Thenkal tanks here on Sunday.💐
🌸 Asian games:India’s Dharun Ayyaswamy celebrates after winning the
silver in the men’s 400m hurdles event at the 18th Asian Games in
Jakarta on August 27, 2018.His home town is Tiruppur🏆🎖
Prepared by
Covai women ICT_போதிமரம்








