இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை,
மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய
திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ்
மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன. நடப்பு
கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள், சென்னை, வேப்பேரியில் உள்ள, இக்னோ மண்டல
அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும்,
https://onlineadmission.ignou.ac.in/admission என்ற இணையதளம் வழியாகவும்,
விண்ணப்பம் அனுப்பலாம் என, இக்னோ தெரிவித்துள்ளது.







