பெண்களுக்கு ஏற்படும் இந்த நீர்க்கட்டிகளை சில அறிகுறிகளை கொண்டு கண்டுபிடிக்க முடியும். இவை ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் உள்ள ஆண்களுக்கான ஹார்மோன்களை தூண்டி விட்டு தாடை, உதடு இவற்றின் மேல் முடி வளர்வதும், முகத்தில் சிறு பருக்கள், எரிச்சல் தன்மை உண்டாவதும் நீர்கட்டிக்கான ஒரு அறிகுறியாகும்.திடீரென்று மனசோர்வு அல்லது எதிலும் நாட்டமின்மை உண்டாகலாம். அதற்கும் நீர்கட்டி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீண்ட இடைவெளிக்கு பின் வரும் மாதவிடாயின் பொழுது அதிக வலி ஏற்பட்டால், அது கண்டிப்பாக நீர்க்கட்டியின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
குறைபாடுள்ள சினைப்பை, கனைய சுரப்பு நீரின் அதிகரிப்பு இவற்றால் ரத்தக்குழாய்களுக்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
ஒரு
நாளில் 60-100 முடி இழைகள் கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதிகப்பட்சமான முடி உதிர்ந்தால் இது நீர்க்கட்டிக்கான மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.
தீர்வுகள்:
காளானில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள் இதை கட்டாயாம் சாப்பிடுவது அவசியம்.
சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இவை பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.
பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளதால் பெண்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.நறுமணமிக்க உணவுப் பொருளான பட்டை இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.
ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது. கலோரி குறைவாக உள்ள பசலைக் கீரையை யும் பெண்கள் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...