இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். 10, 11, 12 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற 2 மறுதேர்வுகள் நடத்தப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் மாதம் மட்டுமே மறுதேர்வு நடைபெறுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்கள் உயர்கல்வி செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 500 மதிப்பெண்கள்தான் கணக்கிடப்படுகிறது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களும், தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்களும், 10 பள்ளிக்கூடங்களுக்கு தலா 500 நூல்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நூல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








