எப்படி வெற்றி காண்பது!
புத்தகங்களைப் படித்துவிட்டு, மனரீதியான சௌகரியங்களின் அடிப்படையில் நீங்கள் வாழ முற்பட்டால், வாழ்க்கை உங்களை முறித்துப் போட்டுவிடும். உங்களைக் கூண்டுக்குள் சிறைப்படுத்தக்கூடிய தேவையற்ற விஷயங்களை நீங்களே வரவழைத்துக் கொண்டவர்கள் ஆகிவிடுவீர்கள். இப்படிப்பட்ட போதனைகள் உங்களை ஏமாற்றத்தான் செய்யும். வாழ்க்கையின் அனுபவங்கள் வேறுவிதமான புத்தி புகட்டிவிடும்.
உண்மையில் 'தான்' என்பதற்கு எந்த ஊக்கமும் செயற்கையான உற்சாகமும் தேவை இல்லை. அது இயங்குவதற்குத் திறன்தான் தேவை.
அன்பும் இல்லாமல், திறமையும் இல்லாமல், நான் அப்படி ஆகவேண்டும், இப்படி ஆகவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளத் துவங்கினால், புத்திதான் பிசகிப்போகும்.
உங்கள் பிரச்சினையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், யோகக் கலாச்சாரத்தில் பலவிதமான கருவிகள் உள்ளன. அடிப்படையாக யோகப்பயிற்சி உங்களுக்கு உதவும். முக்கியமாக, தியானம் பண்ண வேண்டும். தியானம் என்பது மனிதனுக்குள் இருக்கும் பைத்தியத்தை விரட்டும் ஒரு கருவி. மனது பிய்த்துக்கொண்டு நடக்கும் மனபேதியை நிறுத்துவது.
வாழ்க்கையை அனுபவரீதியாகப் புரிந்துகொள்ளத்தான் யோகா. முழுமையான ஈடுபாடும், சுற்றியுள்ளதன்மீது ஆழ்ந்த அன்பும் இருந்தால், உங்கள் திறமையைத் தானாகவே முழுமையாகப் பயன்படுத்துவீர்கள். எந்தப் பாதிப்பும் இல்லாமல், சந்தோஷமாக, ஆனந்தமாக அதேசமயம், வெற்றிகரமாகவும் இருப்பீர்கள்!"
புத்தகங்களைப் படித்துவிட்டு, மனரீதியான சௌகரியங்களின் அடிப்படையில் நீங்கள் வாழ முற்பட்டால், வாழ்க்கை உங்களை முறித்துப் போட்டுவிடும். உங்களைக் கூண்டுக்குள் சிறைப்படுத்தக்கூடிய தேவையற்ற விஷயங்களை நீங்களே வரவழைத்துக் கொண்டவர்கள் ஆகிவிடுவீர்கள். இப்படிப்பட்ட போதனைகள் உங்களை ஏமாற்றத்தான் செய்யும். வாழ்க்கையின் அனுபவங்கள் வேறுவிதமான புத்தி புகட்டிவிடும்.
உண்மையில் 'தான்' என்பதற்கு எந்த ஊக்கமும் செயற்கையான உற்சாகமும் தேவை இல்லை. அது இயங்குவதற்குத் திறன்தான் தேவை.
அன்பும் இல்லாமல், திறமையும் இல்லாமல், நான் அப்படி ஆகவேண்டும், இப்படி ஆகவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளத் துவங்கினால், புத்திதான் பிசகிப்போகும்.
உங்கள் பிரச்சினையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், யோகக் கலாச்சாரத்தில் பலவிதமான கருவிகள் உள்ளன. அடிப்படையாக யோகப்பயிற்சி உங்களுக்கு உதவும். முக்கியமாக, தியானம் பண்ண வேண்டும். தியானம் என்பது மனிதனுக்குள் இருக்கும் பைத்தியத்தை விரட்டும் ஒரு கருவி. மனது பிய்த்துக்கொண்டு நடக்கும் மனபேதியை நிறுத்துவது.
வாழ்க்கையை அனுபவரீதியாகப் புரிந்துகொள்ளத்தான் யோகா. முழுமையான ஈடுபாடும், சுற்றியுள்ளதன்மீது ஆழ்ந்த அன்பும் இருந்தால், உங்கள் திறமையைத் தானாகவே முழுமையாகப் பயன்படுத்துவீர்கள். எந்தப் பாதிப்பும் இல்லாமல், சந்தோஷமாக, ஆனந்தமாக அதேசமயம், வெற்றிகரமாகவும் இருப்பீர்கள்!"
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...