தமிழகத்தின்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில்
ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொட்டுணர்
கருவி என்ற பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்ற
அறிவிப்பை சட்டசபையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு
செய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பயோமெட்ரிக்
கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்தவும் ஆலோசனை
நடத்தப்பட்டது.
இந்தநிலையில், முதல்கட்டமாக அரசு மற்றும்
அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41 ஆயிரத்து 805
பேருக்கும், 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து
774 பேருக்கும், ரூ.15.30 கோடி செலவில் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு
செய்யலாம் என்று தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர்
மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதை பள்ளிக்கல்வி இயக்குனரும்
பரிந்துரைத்தார்.
அதை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த 7,728
பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையை பதிவு
செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...